ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் கூலி ஆட்களாக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய தமிழர்கள் தோட்ட தொழிலாளர்களாக தேயிலை கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களின் பிள்ளைகள் தேயிலை கன்றுகளை பிடுங்கி நாசப்படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை பிள்ளை மடுவங்களை அமைத்து அவற்றில் பிள்ளைகளை பராமரித்து வந்தனர். இக்குழந்தைகளை வெறுமனே வைத்திருக்க முடியாத நிலையில் அவர்களுக்கு சில வகையான கல்வி புகட்டப்பட்டது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கல்வி கூட்டங்களில் ஒன்றுதான் பழைய ஸ்டோர் பாடசாலை கட்டிடம். இது பாடசாலையாக 1938 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |

